வேலுண்டு வினையில்லை , மயிலுண்டு பயமில்லை ,குகனுண்டு குறையில்லை மனமே..கந்தனுண்டு கவலையில்லை மனமே....!
முல்லை வனப் பசுமையும் நெய்தல் நிலத்து அசைவும் ஒருசேர,சமயங்களும் சமத்துவமும் எழுச்சி கண்ட வத்தளை நகரில், சிறு குடிலாய் உருவானது எம்பெருமான் சந்நிதானம்.
எமையாளும் மா விருட்சம்..எட்டுத்திக்கும் அவனருள் கடாட்சம்.
1950ஆம் ஆண்டு சிறிய குடிசையாக ஆரம்பித்த ஹெகித்தை முருகன் ஆலயம் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்களின் ஆன்மீக மையமாக வளர்ந்துள்ளது. பல சவால்களை கடந்து பக்தர்களின் அர்ப்பணிப்பால் இன்று பெருமைமிகு ஆலயமாக விளங்குகிறது.....